PUBLISHED ON : ஜன 15, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய ஒரு ரூபாய்த்தாளை 23 ஆண்டுகளுக்குப் பின் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 1994-ஆம் ஆண்டுடன் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை அரசு நிறுத்தி இருந்தது. இதற்கு மாற்றாக 1 ரூபாய் நாணயங்களே அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டன.
ஆங்கிலேயர் காலத்தில் 1917ஆம் ஆண்டு முதல் முறையாக 1 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. இதுவரை 28 முறை இதன் வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டில் எல்லா ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. ஆனால் 1 ரூபாய் நோட்டை மட்டும் மத்திய அரசே அச்சிட்டு வெளியிடும். ரிசர்வ் வங்கி வெளியிடும் நோட்டுகளில் அதன் கவர்னர் கையெழுத்து இருக்கும். அரசு வெளியிடும் நோட்டில் மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இடம்பெறும். இந்தப் புதிய 1 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

