பெங்களூருவில் 'ஆப்பிள்' நிறுவனத்தின் செயலி வடிவமைப்பு மையம்
பெங்களூருவில் 'ஆப்பிள்' நிறுவனத்தின் செயலி வடிவமைப்பு மையம்
PUBLISHED ON : மே 23, 2016

அ நிறம் | அளவு
அமெரிக்காவில் உள்ள சிலிகான் வேலிக்கு (Silicon Valley) அடுத்தபடியாக அதிக அளவு மென்பொருள் இன்ஜினியர்கள் பெங்களூருவில்தான் பணி புரிகின்றனர். இங்குள்ள பல்வேறு நிறுவனங்களில் சுமார் 10 லட்சம் பேர் கணினித் துறையில் பணியாற்றி வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் 'செயலி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம்' (App Design and Development Centre) தற்போது பெங்களூருவில் அமைய உள்ளது. இதை இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி 'டிம் குக்' தெரிவித்தார்.
