PUBLISHED ON : ஜன 29, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்நாட்டின் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, முதல் முறையாக எலக்ட்ரிக் காரை சந்தைப்படுத்த உள்ளது.
டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள வாகனக் கண்காட்சியில் மாருதி சுசூகி தனது எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த உள்ளது.
ஈ-சர்வைவர் (e-Survivor) எனப் பெயரிடப்பட்ட இது எஸ்.யூ.வி (SUV) வகையைச் சேர்ந்தது. இதில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும். நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடக்கிய பல பாகங்கள் தானியங்கி முறையில் இயங்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது.