sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 11, 2026 ,பங்குனி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

மயக்கும் சுவை, மணம்!

/

மயக்கும் சுவை, மணம்!

மயக்கும் சுவை, மணம்!

மயக்கும் சுவை, மணம்!


PUBLISHED ON : மார் 26, 2018

Google News

PUBLISHED ON : மார் 26, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வெனிலா' (Vanilla) என்றதும் சுவையும், மணமும் நிறைந்த ஐஸ்கிரீம் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். வெனிலா மெக்சிகோவைத் தாயகமாகக் கொண்டது. மரம், செடிகளில் பற்றிப் படர்ந்து கொடியாக வளரும்.

* 35 மீட்டர் நீளம் வரை படர்ந்து வளரும்.

* தடிமனான பச்சை இலைகள், மாற்றடுக்கில் அமைந்திருக்கும்.

* மூன்று ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும்.

* ஒற்றை மலர்க்கொத்தில் 100 பூக்கள் வரை வெள்ளை, பச்சை கலந்த நிறத்தில் நறுமணத்துடன் மலரும்.

* 6 முதல் 9 மாதங்களில் பச்சை நிறக் காய்கள் உருவாகும்.

* காய்கள் இள மஞ்சள் நிறமாக மாறும்போது, அறுவடை செய்யப்படும்.

* நீண்ட சதைப்பற்றுள்ள, மணம் மிக்க காய்கள், சிறிய விதைகளைக் கொண்டிருக்கும்.

இனங்கள்

'வெனிலா பிளானிஃபோலியா' (Vanilla planifolia)

'வெனிலா டாஹிடென்ஸிஸ்' (Vanilla tahitensis)

'வெனிலா பம்போனா'

(Vanilla pompona)

வெனிலா பூக்கள், மெக்சிகோவில் காணப்படும் 'மெலிபோனா' (Melipona) தேனீயால் மட்டுமே, இயற்கையாக மகரந்தச் சேர்க்கை செய்யப்படக்கூடியவை. இந்தத் தேனீ மெக்சிகோவிற்கு வெளியே உயிர் வாழாததால், வெனிலாப் பயிரை பிற இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.

தாவரவியலாளர் 'சார்லஸ் பிரான்கஸ் மோரன்' என்பவர், 1836ஆம் ஆண்டு, வெனிலாவில் சுய மகரந்தச் சேர்க்கை பற்றி ஆய்வு செய்தார். கையால் மகரந்தச் சேர்க்கை செய்யும் எளிய முறை ஒன்று, 12 வயதான எட்மண்ட் ஆல்பியஸ் என்பவரால் 1841இல் உருவாக்கப்பட்டது. சீவப்பட்ட மூங்கில் சிம்பைப் பயன்படுத்தி, கட்டை விரலால் மகரந்தத்தை சூலகத்திற்கு மாற்றும் இந்த முறையே இப்போதும் பயன்பட்டு வருகிறது. இதன் மூலம் வெனிலா உலகளாவிய சாகுபடிப் பயிராக மாறியது.

வெனிலா காய்கள் அதன் நீளத்தைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுகின்றன. பச்சையாகவும், உலர வைக்கப்பட்டும் காய்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உலர் காய்களில் சராசரியாக 2.5 சதவீத வென்னிலின் இருக்கும். பச்சைக் காய்கள் ஒரு கிலோ விலை சுமார் ரூ.3,500; பதப்படுத்தப்பட்டவை கிலோ ரூ.22,500. வெனிலா காய்கள், பிரத்யேக வாசனையுள்ள மூலப்பொருட்கள் நிறைந்தவை. வெனிலாவின் சாறில் உள்ள வென்னிலின் என்ற வேதிப்பொருளே இதற்குக் காரணம்.

உலகில் குங்குமப் பூவிற்கு அடுத்து விலை உயர்ந்ததாக இருக்கும் வேளாண் பயிர் வெனிலா. இது, உணவு வகைகளிலும், அழகு சாதனத் தயாரிப்புகளிலும் அதிகம் பயன்படுகிறது. வெனிலாவில் இருந்து பெறப்படும் எசன்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட், குளிர்பானங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. வெனிலா எண்ணெய், வென்னிலின் ஆகியவை நறுமண சிகிச்சையிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.

- அ.லோகமாதேவி






      Dinamalar
      Follow us