PUBLISHED ON : அக் 19, 2016

சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் வாழ்ந்த வீட்டை இடிக்க, ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது. ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் அடால்ஃப் ஹிட்லர். இவர் முதலாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகித்தார்; இவருடைய கட்டுப்பட்டில் இருந்த நாஜி படைகள் உலக நாடுகளை கதி கலங்கச் செய்தன.
ஹிட்லர், ஒருங்கிணைந்த ஹங்கேரியில் உள்ள பிரான்னா ஆம் இன் என்ற பகுதியில், 1889ம் ஆண்டு பிறந்தார். தற்போது இநத இடம் ஆஸ்திரியா நாட்டில் உள்ளது. மூன்று மாடிகள் கொண்ட அந்த கட்டடத்துக்கு, ஹிட்லரின் ஆதரவாளர்கள் உட்பட பலரும் சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். ஹிட்லரின் தீவிர ரசிகர்களில் சிலர், அந்த பகுதியை புனித தலமாக கருதுகின்றனர்.
அதை ஆஸ்திரியா அரசு விரும்பவில்லை. இதனால், ஹிட்லர் பிறந்த வீட்டை கையகப்படுத்தியுள்ள ஆஸ்திரிய அரசு, அதை இடித்து தள்ள முடிவு செய்துள்ளது. அரசிடமிருந்து முறையான ஒப்புதல் கிடைத்த பிறகு வீடு இடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படகிறது. ஆனால், ஆஸ்திரிய அரசின் இந்த நடவடிக்கை, வரலாற்றை அழிக்கும் செயல் என்று ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
