PUBLISHED ON : ஜூலை 08, 2019

அ நிறம் | அளவு
பள்ளி வேலை நேரங்களில், ஆலோசனைக் கூட்டங்களுக்காக ஆசிரியர்கள் வெளியே செல்லக்கூடாது என, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த தகவல்களை தலைமை அலுவலகத்தில் இருந்து கேட்டால், ஆசிரியர்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. நிர்வாகரீதியான கூட்டங்களை மாலைநேரம் அல்லது சனிக்கிழமைகளில் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
