உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 30, 2018

அ நிறம் | அளவு
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ராமன் மகசேசே (Ramon Magasaysay) நினைவாக, அவர் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. ஆசியாவின் நோபல் என்று அழைக்கப்படும் இவ்விருது சமூக சேவை, கலை, இலக்கியம், வளரும் தலைவர்கள் என பல பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டு 2 இந்தியர்கள் உட்பட 6 பேருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களில், மும்பையைச் சேர்ந்த பரத் வத்வானி மனநல மருத்துவர். மனநலம் பாதிக்கப்பட்ட, ஆதரவற்றவர்களுக்கு சிகிச்சையும் உதவியும் அளித்து வருகிறார். மற்றொரு இந்தியர் சோனம் வாங்க்சுக், காஷ்மீரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி. லடாக் பகுதி குழந்தைகளின் கல்விக்காக உழைத்து வருகிறார். இவரது முயற்சியால் 1996இல் 5 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் இப்போது 75 சதவீதமாக உயர்ந்துள்ளது.
