sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

/

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி


PUBLISHED ON : மே 23, 2016

Google News

PUBLISHED ON : மே 23, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சு: ஏன் சாந்தி மழைல நனையுற. சளி புடிச்சுக்கும். மரியாதையா குடைக்குள்ள வா.

சாந்தி: அடப்போடி. எப்பவாவதுதான் இந்த மழையே வருது. கொஞ்ச நேரம் நனையலாம்ன்னு பாத்தா விடமாட்டியே...

ம: இப்படியே நனைஞ்சுகிட்டே இரு. பாக்டீரியா, வைரஸ், நாக்குப் பூச்சி அது இதுன்னு ஏதாச்சும் பரவி, காய்ச்சல் வரப் போகுது பாரு.

சா: நீ இதுக்கெல்லாம் பயந்துகிட்டு இரு மஞ்சு. அமெரிக்கா விஞ்ஞானிகள் மழையை வரவழைக்கிற பாக்டீரியாவையே கண்டுபிடிச்சிருக்காங்களாம்!

ம: மே மாசமே முடியப் போகுது. இப்ப வந்து ஏப்ரல் ஃபூல் பண்ணுறியா?

சா: யாரையும் ஃபூல் பண்ணல. தாவரங்கள்ல வளரும் அந்த பாக்டீரியாக்கள் காற்று வழியாக மேகத்துக்குச் சென்று ஐஸ்கட்டியாகி குறிப்பிட்ட வெப்ப நிலைல மழையாப் பொழியும்ன்னு கண்டுபிடிச்சிருக்காங்க!

ம: ஓ! அப்படின்னா ஃபர்ஸ்ட் அந்த பாக்டீரியாக்கள வச்சு வறண்டு கிடக்குற நம்ம தாத்தா ஊர்ல அளவில்லாம ரொம்ப மழை பெய்ய வைக்கணும்!

சா: அளவில்லாம எப்படி? மழையை அளக்குறதுக்குத்தான் மழைமானி இருக்கே!

ம: வானத்துல இருந்து விழுற மழையை அளக்க முடியுமா? அவ்ளோ பெரிய ஸ்கேலா அந்த மழைமானி?

சா: ஸ்கேல் மாதிரி இல்ல. உருளையா இருக்குற மழைமானிக்கு உள்ளே ஒரு புனல் (funnel) இருக்கும். அதுல 0 மி.மீ. முதல் 25 மி.மீ. வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும்.

ம: இது எப்படி மழையை அளக்கும்? எனக்குப் புரியலையே...

சா: மழை பெய்யும்போது மழைமானியைத் திறந்து வைக்கணும். சரியா, 24 மணி நேரத்துக்கு அப்புறமா அதில் சேர்கிற நீரை மில்லி மீட்டரில் அளவு எடுத்துக் கணக்கிட்டால் எவ்வளவு மழை பெஞ்சதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

ம: இதுக்கு ஏன் இவ்ளோ கஷ்டப்படணும். என்கிட்ட கேட்டா அளக்காமலே நான் சொல்லுவேன். இது சின்ன மழை, போன வாரம் பெஞ்சது பெரிய மழை, போன வருசம் பெஞ்சது ரொம்பப் பெரிய மழை...

சா: நீ அதெல்லாம் சொல்ல வேணாம். 'துப்பார்க்குத் துப்பாய' அப்படின்னு மழை சம்பந்தமா ஒரு திருக்குறள் இருக்கே, அதச் சொல்லு பாக்கலாம்.

ம: இதோ வரேம்மா. அம்மா கூப்பிடுற மாதிரி இருக்கு. வெயிட் பண்ணு சாந்தி! போய்ட்டு வந்து குறள் சொல்றேன்.






      Dinamalar
      Follow us