செய்தி அறிவோம்: தேசிய நெடுஞ்சாலைகளில், விமான ஓடுதளங்கள்
செய்தி அறிவோம்: தேசிய நெடுஞ்சாலைகளில், விமான ஓடுதளங்கள்
PUBLISHED ON : அக் 20, 2016

நாடு முழுவதும், நெடுஞ்சாலைகளை விமான ஓடு தளங்களாக பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்துக்காக, மத்திய அரசு 22 இடங்களை தேர்வு செய்துள்ளது.
விமான போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, தேசிய நெடுஞ்சாலைகளை, ராணுவ விமான ஓடுதளங்களாகவும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நாடு முழுவதும், 22 தேசிய நெடுஞ்சாலை பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 'இந்த திட்டம் மூலம், முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத, நாட்டின் தொலைதூர இடங்களுக்கும், விமானம் மூலம் விரைவாக சென்றடையலாம். மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், நெடுஞ்சாலை துறையும் இணைந்து, நெடுஞ்சாலையில் விமான ஓடுதளம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்' என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
