sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/வலி மிகுதல் - பகுதி 10: விளித்தொடருக்கு வலி மிகாது

வலி மிகுதல் - பகுதி 10: விளித்தொடருக்கு வலி மிகாது

வலி மிகுதல் - பகுதி 10: விளித்தொடருக்கு வலி மிகாது


PUBLISHED ON : நவ 26, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2018


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

'வள்ளி சிரித்தாள்' என்னும்போது, அங்கே வலி மிகவில்லை. ஏனென்றால், வள்ளி என்பது பெயர்ச்சொல். சிரித்தாள் என்பது வினைச்சொல். வள்ளி என்னும் எழுவாயும் சிரித்தாள் என்ற பயனிலையும் அடுத்தடுத்து வந்தன. எழுவாயும் பயனிலையும் அவ்வாறு வருவது எழுவாய்த் தொடர் எனப்படும். எழுவாய்த் தொடருக்கு வலி மிகாது என்பதால், 'வள்ளி சிரித்தாள்' என்று எழுதுகையில் வலி மிகவில்லை. 'வள்ளிச் சிரித்தாள்' என்று ஒற்று(ச்) சேர்த்து எழுதக்கூடாது.

முதற்சொல் பெயராக இருந்து, அடுத்து வரும் சொல் வினையாக அமைந்தால் அங்கே வலி மிகுவதில்லை. இன்னொரு தொடரைப் பார்க்கலாம்.

* தம்பி பார்

* முத்து போ

* வள்ளி திரும்பு

இத்தொடர்களில் முதற்சொற்கள் பெயர்ச்சொற்களாக இருக்கின்றன. தம்பி, முத்து, வள்ளி ஆகியவை பெயர்ச்சொற்கள்தாம். அதையடுத்து வருபவை பார், போ, திரும்பு என்னும் வினைச்சொற்களே. இது எழுவாய்த் தொடராகுமா? ஆகாது. ஏனென்றால், எழுவாய்த் தொடரில் அதனை அடுத்துவரும் வினைச்சொல் எழுவாய்க்கு உரியதாக இருக்கும். எழுவாய் செய்யும் வேலையைத்தான் அந்த வினைச்சொல் உணர்த்தும். வள்ளி சிரித்தாள் என்னும்போது சிரிக்கும் வினையை வள்ளி என்னும் எழுவாய் செய்தது.

ஆனால், தம்பி பார் என்னும் வினையில் தம்பியை அழைத்துப் பார்க்கும்படி யாரோ கட்டளையிடுகிறார்கள். முத்தினை அழைத்துப் போகச் சொல்கிறார்கள். வள்ளியைத் திரும்பச் சொல்கிறார்கள்.

இவ்வாறு ஒரு பெயரை அழைத்து அமைக்கும் தொடர்கள் 'விளித்தொடர்கள்' எனப்படும். விளித்தல் என்றால் அழைத்தல். தலைவா வா, கண்ணே கண்ணுறங்கு, கிளியே பேசு, பறவையே பறந்து செல், நிலா ஓடி வா, பெரியோர்களே சிந்தியுங்கள் என்பவை அனைத்தும் விளித்தொடர்கள்.

விளித்தொடரிலும் ஒரு பெயர்ச்சொல்லும் அதையடுத்து ஒரு வினைச்சொல்லும் அமைந்திருக்கும். ஆனால் பெயர்ச்சொல் அழைப்புக்கு உட்பட்டதாக இருக்கும்.

எழுவாய்த் தொடருக்கு எப்படி வலி மிகுவதில்லையோ அவ்வாறே விளித் தொடருக்கும் வலி மிகாது. தம்பி பார், முத்து போ, வள்ளி திரும்பு ஆகிய தொடர்களில் எங்கும் வலி மிகவில்லை.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us