sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

இந்தியாவின் கவிக்குயில்

/

இந்தியாவின் கவிக்குயில்

இந்தியாவின் கவிக்குயில்

இந்தியாவின் கவிக்குயில்


PUBLISHED ON : பிப் 12, 2018

Google News

PUBLISHED ON : பிப் 12, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சரோஜினி நாயுடு

13.2.1879 - 2.3.1949

ஹைதராபாத், தெலங்கானா


சிறுமியாக இருந்தபோது, 'ஏரியின் அழகி' எனும் தலைப்பில் நீண்ட கவிதை ஒன்றை எழுதினார். அவரது படைப்புகளால் ஈர்க்கப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித்தொகை வழங்கினார். உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, பாரசீக மொழிகளும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. சிறப்பாகப் படித்ததால் ஒரு கணிதமேதையாகவோ, விஞ்ஞானியாகவோ ஆக்க விரும்பினார் அவரது தந்தை. இவருக்கோ கவிதை எழுதுவதில்தான் அதிக ஆர்வம். அதனால், கவிதைகள் பல எழுதி ஆங்கில எழுத்தாளர்களையும் தனது கவித்திறமையால் வியக்கவைத்தார் 'கவிக்குயில்' சரோஜினி.

அவரது கவிதைகளில் மலைகள், ஆறுகள், கோவில்கள், சமூகச்சூழல் என இயற்கை அழகு தவழும். இந்திய வாழ்க்கை, நிகழ்வுகள் போன்றவற்றையும் தனது கவிதைகளில் கொண்டுவந்தார். அவரது படைப்புகளுக்கு தாகூர், நேரு உட்பட உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் சேர்ந்தனர்.

1905இல் வங்கப் பிரிவினையின்போது, இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தில் சரோஜினியும் சேர்ந்தார். கோகலே, தாகூர், ஜின்னா, அன்னிபெசன்ட், காந்தி, நேரு போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையிலும், ஒத்துழையாமை இயக்கத்திலும், போராட்டங்களிலும் பங்குபெற்று சிறை சென்றார். இந்தியா முழுவதும் இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை, தேசியப்பற்று குறித்த சொற்பொழிவுகளை நிகழ்த்த, பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டு, சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார்.

20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த பெண்மணிகளில் ஒருவராகத் திகழ்ந்த சரோஜினியின் பிறந்தநாள், இந்தியாவில் மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.






      Dinamalar
      Follow us