sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

காயங்களை ஆற்றும் அரிசி!

/

காயங்களை ஆற்றும் அரிசி!

காயங்களை ஆற்றும் அரிசி!

காயங்களை ஆற்றும் அரிசி!


PUBLISHED ON : பிப் 12, 2018

Google News

PUBLISHED ON : பிப் 12, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்மான் பச்சரிசி

ஆங்கிலப் பெயர்கள்: 'ஆஸ்த்மா வீட்' (Asthma Weed), 'காமன் ஸ்பர்ஜ்' (Common Spurge), 'கேட்'ஸ் ஹேர்' (Cats Hair)

தாவரவியல் பெயர்: 'ஈபோர்பியா ஹிர்டா' (Euphorbia Hirta)

வேறு பெயர்கள்: சித்திரப்பாலாடை (தமிழ்), நெலாப்பாலை (மலையாளம்), நனபாலு (தெலுங்கு), அச்சேடிடா (கன்னடம்), பாரா துதி (இந்தி)

அம்மான் பச்சரிசி ஒரு மருத்துவ மூலிகை. இதன் பேரைக் கேட்டதும் இது அரிசியோ என்று நினைக்க வேண்டாம். ஈரமுள்ள இடங்களில் தானே வளரும் சிறு செடி இது. 'ஈபோர்பியாசியே' (Euphorbiaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. தரிசு நிலம், சமவெளி, வயல்வெளிகளில் இவற்றைக் காணலாம். மிகச்சிறிய அளவில் தரையோடு படர்ந்து காணப்படும். கொடி வகையும் உண்டு. இதன் கொடி மூன்று அங்குலம் நீளமாக தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும்.

செடி 50 செ.மீ. உயரம் வரை வளரும். ஆண்டு முழுவதும் வளரக்கூடிய தாவரம். எதிர் அடுக்கில் கூர்நுனிப் பற்களுடன் கூடிய ஈட்டி வடிவ இலைகளை உடையது. இலைகள் பச்சை, சிவப்பு நிறங்களில் சொரசொரப்பாக இருக்கும். இலைகள் துவர்ப்பு, இனிப்புச் சுவையுடையது. உடலுக்குக் குளிர்ச்சி தரும். தாவரத்தின் எந்தப் பகுதியைக் கிள்ளினாலும் பால் வடியும். பூக்கள் தொகுப்பாக கணுக்களில் அமைந்திருக்கும். பூக்கள் வெண்ணெய் நிறத்திலும், காம்புகளுடனும் காணப்படும்.

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இந்தச் செடி, தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது. வித்தியாசமான பெயரைக் கொண்ட இது, வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.செடியின் இலை, தண்டு, பால், பூ ஆகியவை நோய் தீர்க்கும் அருமருந்து. முகப்பரு, பித்த வெடிப்பு, காயங்களை ஆற்றுதல் ஆகியவற்றிற்கு, மருந்தாகப் பால் உதவுகிறது. தாவரத்தின் பிற பாகங்கள் சருமநோயைத் தீர்த்தல், காயங்களை ஆற்றுதல், வயிற்றுப்பூச்சியை அகற்றுதல் ஆகியவற்றிற்கும் மருந்தாகிறது.

வகைகள்

பெரியம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி, வயம்மாள் பச்சரிசி

- கி.சாந்தா






      Dinamalar
      Follow us