PUBLISHED ON : மே 30, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகின் செல்வம் மிகுந்த ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்ஸர்லாந்து புதுமையான திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இதன்படி, அந்த நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் வேலைக்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும் மாதந்தோறும், 1.70 லட்சம் ரூபாயை அரசே வழங்கும். குழந்தைகளுக்கு, 40 ஆயிரம் ரூபாய்! வறுமையை ஒழிக்க அந்த நாட்டில் சில அறிஞர்கள் இந்தத் திட்டத்தை முன்வைத்தனர். எனினும், அங்கு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு, பொதுமக்களின் ஒப்புதல் அவசியம். எனவே, ஜூன் 5ல் பொது ஓட்டெடுப்பு நடக்கவுள்ளது. மக்கள் ஆதரவு தெரிவித்தால், இந்தத் திட்டம் அமுலுக்கு வரும். இதற்குப் பெரும் தொகை செலவாகும் என்பதால் அந்த நாட்டில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர்.

