sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 10, 2026 ,பங்குனி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

சீதனப் புலவர்

/

சீதனப் புலவர்

சீதனப் புலவர்

சீதனப் புலவர்


PUBLISHED ON : செப் 17, 2018

Google News

PUBLISHED ON : செப் 17, 2018


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்ப்பா வகைகளில் வெண்பா மிகவும் இனிமையானது. அத்தகைய வெண்பா பாடுவதில், புகழேந்தி வல்லவர். 'வெண்பாவுக்கோர் புகழேந்தி' எனப் புகழப்படுகிறார்.

இவர், வரகுண பாண்டியனின் அரசவைப் புலவராக இருந்தார்; அரசரின் மகளுக்கும் ஆசிரியராக இருந்தார். சோழன் இரண்டாம் குலோத்துங்கனை இளவரசி மணம்முடித்தார். இளவரசியுடன், புலவர் புகழேந்தியும் சீதனமாக சோழ நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால், சோழனின் அவைப்புலவர் ஒட்டக்கூத்தர், புகழேந்தியிடம் பகைமை பாராட்டினார். எனவே, அங்கிருந்து விலகி, உறையூரை அடுத்த, மள்ளுவ தேசத்தை ஆண்ட, 'முரணைநகர்' சந்திரன் சுவர்க்கி என்னும் சிற்றரசரிடம் சென்றுவிட்டார்.

அங்குதான், நள தமயந்தி கதையை, 'நளவெண்பா' என்ற பெயரில் எழுதினார் புகழேந்தி.

இந்நூலில், ஆறு பாடல்களில் மன்னர் தன்னை ஆதரித்த, சந்திரன் சுவர்க்கியைப் புகழ்ந்துள்ளார் புகழேந்தி.

- த.சங்கர்.






      Dinamalar
      Follow us