PUBLISHED ON : அக் 22, 2018

அக்டோபர் 24, 1948 - ஐக்கிய நாடுகள் நாள்
உலகின் மிக உயர்ந்த அமைப்பாக ஐ.நா. சபை கருதப்படுகிறது. எதைப் பற்றியும் விவாதம் செய்வது, ஆராய்வது போன்ற உரிமைகளை இது கொண்டுள்ளது. இதன் சாதனைகளைக் கூறுவதே இந்த நாளின் நோக்கம்.
அக்டோபர் 24, 1921 - ஆர்.கே. லஷ்மண் பிறந்த நாள்
'திருவாளர் பொதுஜனம்' என்கிற கேலிச் சித்திரக் கதாபாத்திரத்தை வரைந்த இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர். பத்மவிபூஷண், வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.
அக்டோபர் 25, 1881 - பாப்லோ பிகாசோ பிறந்த நாள்
ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர். 'கியூபிசம்' எனப்படும் புதிய ஓவிய பாணியை அறிமுகப்படுத்தினார். அமைதியின் அடையாளச் சின்னமாக ஆலிவ் இலைகள், புறாவை பிரபலப்படுத்தியது இவரே!
அக்டோபர் 27, 2005 - உலக ஒலி, ஒளி பாரம்பரிய நாள்
திரைப்படம், தொலைக்காட்சி போன்ற காணொலிக் காட்சிகளால் ஏற்படும் நன்மை, தீமை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கம். யுனெஸ்கோ அமைப்பு இந்த நாளை அங்கீகரித்தது.
அக்டோபர் 28, 1955 - பில் கேட்ஸ் பிறந்த நாள்
மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவர். முதன்மைச் செயல் அதிகாரியாகவும் மென்பொருள் வல்லுனராகவும் பணியாற்றினார். உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருக்கிறார்.
அக்டோபர் 28, 1955 - இந்திரா நூயி பிறந்த நாள்
'பெப்சி' நிறுவனத்தின் தலைவர். 2015இல் ஃபார்ச்சூன் இதழ் வெளியிட்ட உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். 2007இல் பத்மபூஷண் விருது பெற்றார்.
