உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 04, 2016

அ நிறம் | அளவு
தமிழகத்தில் உள்ள ரயில் பாதைகளின் இருபுறங்களிலும் மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழக வனத்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு, மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரப்படி, நாட்டிலேயே வனப்பரப்பு அதிகரிப்பில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிலையில், ரயில்வே துறை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையுடன் இணைந்து, ரயில் பாதைகளை ஒட்டி ஐந்து கோடி மரங்களை வளர்த்து, பசுமைப் போர்வையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
