
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூய்மை இந்தியா திட்டத்தின்படி, தூய்மையான கிராமங்கள் உள்ள முதல் மாநிலமாகத் தமிழகம் தேர்வாகியுள்ளது. குஜராத், ஹரியாணா ஆகிய மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதற்கான விருதை, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி ஆமதாபாத்தில் நடந்த விழாவில், பிரதமர் மோடியிடமிருந்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பெற்றுக்கொண்டார்.

