PUBLISHED ON : அக் 10, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெலங்கானா: தெலங்கானா பகுதியில் சாலை விதிகளைக் கண்டுகொள்ளாமல் பலரும் அலட்சியமாக வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. சாலை விதிகளை மீறுபவர்களுக்கு மெஹபூப் நகரின் காவல் துறை அதிகாரி ரேமா ராஜேஸ்வரி சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் புதிய தண்டனையை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தெலங்கானா அரசாங்கம் மரம் வளர்ப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சாலை விதிகளை மீறுபவர்கள் கட்டாயமாக மரக்கன்று நட்டு, அபராதமும் செலுத்த வேண்டும் என்பதே அந்த தண்டனை. இவரின் இந்த முயற்சியால் 2,765 மரக்கன்றுகள் இதுவரை நடப்பட்டுள்ளன.

