உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 18, 2019

அ நிறம் | அளவு
காரக்பூர் ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவர்கள் குழு, கள்ள ரூபாய் நோட்டை, எளிமையாகக் கண்டறியும் மொபைல் செயலியை உருவாக்கி உள்ளனர். இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் என்பது, அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. படித்தவர்களே நல்ல நோட்டுக்கும் போலி நோட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஏமாந்துவிடுகின்றனர். இந்த நிலையில் பாமர மக்களின் நிலையைப் பற்றி தனியே சொல்லத் தேவை இல்லை.
இனி அந்தக் கவலை இல்லை. தற்போது மாணவர்கள் உருவாக்கி உள்ள இந்த மொபைல் செயலி மூலம் ரூபாய் நோட்டு உண்மையானதா, போலியானதா என்பதைக் கண்டறிய முடியும். சதீஷ்குமார், சந்தோஷ், விபுல், சாய் கிருஷ்ணா, துளசி, டி.வி.சாய் சூர்யா ஆகிய 6 பேர் கொண்ட மாணவர் குழுவினர்தான், புதிய மொபைல் செயலியை உருவாக்கி உள்ளனர்.
