உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 05, 2018

அ நிறம் | அளவு
நாளை தீபாவளியன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்றும், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் மக்கள் ஒன்றுகூடி திறந்தவெளியில் பட்டாசு வெடிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளைத் தவிர்க்கவும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பிடிக்கும் பகுதிகளில், பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
