
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பையிலிருந்து பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூர் நகருக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் 'பஞ்சாப் மெயில்' தனது 104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த முதல் ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 'தி பஞ்சாப் லிமிடெட்' என்ற பெயரில் 'பஞ்சாப் மெயில்' ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் மும்பையில் இருந்து (அப்போது பம்பாய்), பெஷாவர் (தற்போது பாகிஸ்தானில் உள்ள நகரம்) வரை சென்று வந்தது. கடந்த 1912ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த ரயில் தற்போது மும்பை முதல் ஃபிரோஸ்பூர் வரை இயங்குகிறது. இந்த ரயில் 34 மணி நேரத்தில் (1,930 கி.மீ. தூரம்) மும்பையிலிருந்து ஃபிரோஸ்பூர் சென்றடைகிறது.

