PUBLISHED ON : ஜூன் 06, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் எச்சரிக்கை பட்டன்கள், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள், ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படும். வாகன தயாரிப்பின் போதே, இந்த கருவிகளுடன் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

