sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/செடியில் காய்க்கும் கம்பளி!

செடியில் காய்க்கும் கம்பளி!

செடியில் காய்க்கும் கம்பளி!


PUBLISHED ON : ஆக 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வறட்சியைத் தாங்கி விளையும் தாவரங்களில் பருத்தி முக்கியமானது. அதனால்தான் நீர் வளம் குறைவான கரிசல் நிலங்களில் இது காணப்படுகிறது.

பருத்தியின் தாவரவியல் பெயர் காசிப்பியம் லின் (Gossypium Linn). இது குத்துச் செடியாக வளரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்திலும், வெளிர் கருஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். இதன் முற்றிய காய்களில் இருந்து பஞ்சு எடுத்து, நூல் நூற்று, ஆடை நெய்யப்படுகிறது.

'உலகிலேயே சிந்து சமவெளி மக்கள்தான் பருத்தி நெசவு முறையை முதன்முதலாகத் தெரிந்துகொண்டவர்கள்' என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த நாகரிகத்தின் முக்கிய நகராக இருந்த மொகஞ்சதாரோவில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 5,000 வருடங்களுக்கு முன்னால் நெய்யப்பட்ட பருத்தி ஆடைத் துண்டுகள் கிடைத்துள்ளன.

'இந்தியப் பிரதேச மக்கள் வளர்க்கும் ஒரு வகை தாவரத்தில், கனிகளுக்குப் பதிலாக, செம்மறி ஆட்டுக் கம்பளியை விடத் தரமான கம்பளி காய்க்கிறது!' இப்படி கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெரோடெட்டஸ் (Herodetus), சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் இருக்கும் 2100 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளில் 'அறுவை வணிகன்' என்ற சொல் இருக்கிறது. 'அறுவை' என்பது துணியைக் குறிக்கிறது. துணி வணிகர்களைப் பற்றிய இந்தக் குறிப்பில் இருந்து, தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்திலேயே பருத்தி பயன்பாட்டில் இருந்ததை அறிய முடிகிறது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us