1,000 பக்கங்கள் உள்ள ஒரு மர்ம நாவலை, மிகவும் ஆவலோடு படித்துக் கொண்டிருந்தேன்!
வேகமாக ஓடி வந்த என் கடைக்குட்டி, 'இந்த அப்பாவுக்கு வேறு வேலையே இல்லை! எப்போ பாத்தாலும் கம்ப்யூட்டரு! இல்லன்னா கதை புக்கு!' என்று சொல்லி, புத்தகத்தைப் பிடித்து இழுத்தாள். பழைய புத்தகம் என்பதால், ஒன்பது பக்கங்கள் கிழிந்துவிட்டன. கிழிந்த தாள்களின் பக்க எண்களைக் கூட்டத் தொடங்கினேன். கூட்டுத் தொகை 1000 வருமா?
விடை:
வராது. புத்தகத்தின் பக்க எண்களைப் பொறுத்த வரை, ஒரு தாளின் இரண்டு பக்கங்களில், ஒன்றில் ஒற்றை எண்ணும், மற்றதில் இரட்டை எண்ணும் இருக்கும். அவற்றைக் கூட்டினால் கண்டிப்பாக ஒற்றை எண்தான் வரும். எனவே, ஒன்பது தாள்களின் பக்க எண்களைக் கூட்டும்போதும் ஒற்றை எண்தான் வரும். இரட்டைப்படை எண்ணான 1,000 வராதுதானே.
கு. சீனுவாசன்,
பட்டதாரி ஆசிரியர், ஊ.ஒ.ந.பள்ளி, சாலைஅகரம், விழுப்புரம் மாவட்டம்.

