sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நெல்லுக்கு நாற்றங்கால் எதற்கு?

/

நெல்லுக்கு நாற்றங்கால் எதற்கு?

நெல்லுக்கு நாற்றங்கால் எதற்கு?

நெல்லுக்கு நாற்றங்கால் எதற்கு?


PUBLISHED ON : ஜன 13, 2020

Google News

PUBLISHED ON : ஜன 13, 2020


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல் தாவரத்தின் கனிதான் நெல். நெல் என்பது ஒருவித்திலை தாவரம். கடினமான ஓடுகளைக் கொண்ட தென்னை மரங்களை மண்ணில் நடலாம். ஆனால், நெல்லுக்கு இந்த வாய்ப்பு இல்லை. இப்பயிருக்கு அதிக நீர்வளம், சரியான தட்பவெப்பம் தேவை. அதிக மழைப்பொழிவு கொண்ட நிலமாக இருந்தால் நெல் அழுகிவிடும். அதேநேரம், நெல், வறட்சியான மண்ணில் இருந்தால் காய்ந்துவிடும். எனவே, நெற் பயிருக்கு நாற்று விட்டு அதன் முளைப்புத் திறனை அதிகப்படுத்தி நடுகிறார்கள். ஒரைசா சட்டைவா எனும் நெல்லின் காட்டு ரகத்திற்கு இவை எதுவும் தேவையில்லை. அவை தானாகவே நிலத்தில் விழுந்து முளைக்கும். பிற விதை ரகங்களைப்போல நிலத்தில் நெல்லைத் தூவினால் அவை முளைக்க அதிக சவால்களை எதிர்கொள்ளும். எனவே, நெல்லுக்கு நாற்றங்கால் உருவாக்கி நெற் பயிரை வயல்களில் எடுத்து நடுகிறார்கள்.

நெல்லின் சேமிப்பு வரம்பு

நவீன நெல் ரகங்களை ஆலைகளில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சேமித்து வைக்கின்றனர். காலாநமக், சிவப்பரிசி போன்ற உப்புச்சத்து கொண்ட அரிசி ரகங்களை அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சேமித்து வைக்க முடியும். சேமிக்கும் காலம் அதிகரிக்கும்போது, நெல்லின் முளைப்புத்திறன் குறையும்.

- இளங்கோ






      Dinamalar
      Follow us