sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 24, 2026 ,சித்திரை 11, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

இளைய எழுத்தாளர்கள் போர்ப் பறவை

/

இளைய எழுத்தாளர்கள் போர்ப் பறவை

இளைய எழுத்தாளர்கள் போர்ப் பறவை

இளைய எழுத்தாளர்கள் போர்ப் பறவை


PUBLISHED ON : ஏப் 02, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 02, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான்சி யி ஃபேன் (Nancy Yi Fan)

சீனாவில் 1993-ஆம் ஆண்டில் பிறந்தவர்

நான்சி. தனது ஏழாம் வயதில் பெற்றோருடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். எல்லாச் சீனர்களையும்போல், அவரது பெற்றோரும் தனது குழந்தை அங்கிருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கருதினர்.

சக மாணவர்களைவிட ஒரு படி மேலான புரிதலோடும், கற்கும் திறனோடும் இருந்த நான்சி, சிறுகதை ஒன்றை எழுதினார். அக்கதையைப் படித்த ஆசிரியர் அது சிறப்பாக இருப்பதாக நான்சியின் பெற்றோரிடம் கூற, அவர்கள் தங்கள் மகளின் வாசிப்பு மற்றும் எழுத்தார்வத்தை ஊக்குவித்தனர். பத்து வயதான நான்சி தனது மனத்தில் தோன்றிய ஒரு கதையை, நாவலாக எழுதத் தொடங்கினார். அந்நாவலை எழுதி முடித்ததும் வாசித்துப் பார்த்த நான்சி, அதில் இடம்பெற்றிருந்த

40 கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை நீக்கித் தனது படைப்பைச் செம்மைப்படுத்தினார். இப்படித்தான் நான்சியின் 'Sword Bird' படைப்பு முழுமையடைந்தது.

ராபின் பறவைகள், அதன் நண்பர்களோடு சேர்ந்து பியானோ இசைத்துக்கொண்டு, சுவையான உணவை உண்டபடி தங்கள் வாழ்வை ஆடிப்பாடிக் களிக்கின்றன. அப்போது அதே காட்டில் இருக்கும் பருந்துகள் உட்பட வேறு சில பறவைகளுக்கும் இவற்றிற்கும் மோதல் உருவாகிறது. வாள் வீசுவதில் திறமை பெற்றிருந்த ராபின் பறவைகளும், அதன் நண்பர்களும் எப்படித் தங்கள் எதிரிகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடுகின்றன என்பதுதான் கதை.

இயல்பிலேயே பறவைகள் மீது அன்புகொண்டவர் நான்சி. அவற்றின் பண்புகளையும், தான் படித்த வீரர்களின் போராட்டங்களையும் இணைத்து இப்படைப்பை உருவாக்கினார். 2007-ஆம் ஆண்டில் வெளியான இந்நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, நான்சியை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர் அவர். இன்று அமெரிக்க இளையோர் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளராக அறியப்படுகிறார்.

நான்சியின் பிற நூல்கள்: Sword Quest, Sword Mountain

ஜி.சரண்






      Dinamalar
      Follow us