வண்ணங்களின் சங்கமம்: பாரதம் முழுவதும் ஒரு ஹோலிப் பயணம்!
வண்ணங்களின் சங்கமம்: பாரதம் முழுவதும் ஒரு ஹோலிப் பயணம்!
PUBLISHED ON : மார் 03, 2026 10:00 PM

'வசந்தம் வந்தாச்சு...' என்று வானம் பாடும் முன்னே, மண்ணில் வண்ணங்கள் பேசத் தொடங்கும் ஒரு திருவிழா உண்டென்றால் அது ஹோலிதான். நாடு முழுவதும் சாதி, மதம், இனம் கடந்து மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைத் தூவி அன்பைப் பரிமாறிக்கொள்ளும் இந்தத் திருவிழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது, இந்த பண்டிகை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான சுவாரசியத்தைக் கொண்டுள்ளது.




தென்னிந்தியாவில், வட மாநிலங்களில் இருந்து வந்து குடியேறிவர்கள் தங்கள் குடியிருப்புகளில் இந்த பண்டிகை தங்களுக்குள் கொண்டாடி மகிழ்கின்றனர் சென்னை சவுகார் பகுதி அதற்கு ஒரு சான்றாகும்.
இன்றும் வீதிகளில் இறங்கி முன்பின் தெரியாதவர் மீதும் அன்பால் வண்ணம் பூசும் அந்த நொடி இருக்கிறதே... அதுதான் இந்தியாவின் உண்மையான ஒற்றுமை!
பழைய கசப்புகளை மறந்து, பகைமையைத் துறந்து, புதிய உறவுகளுக்கு வண்ணம் பூசும் ஹோலி பண்டிகை, இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் ஒரு 'வண்ணத் தூரிகை'.
-எல்.முருகராஜ்

