sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

மிரள வைத்த மயானக் கொள்ளை

/

மிரள வைத்த மயானக் கொள்ளை

மிரள வைத்த மயானக் கொள்ளை

மிரள வைத்த மயானக் கொள்ளை


PUBLISHED ON : பிப் 18, 2026 03:20 PM

Google News

PUBLISHED ON : பிப் 18, 2026 03:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயான கொள்ளை என்பது தமிழகத்தில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளில் மாரியம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயங்களில் மகா சிவராத்திரிக்கு மறுநாள் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான திருவிழாவாகும்.Image 1537788இதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான புராணக் கதையைச் சுருக்கமாகக் கீழே காணலாம்:

சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தது போலவே, ஒரு காலத்தில் பிரம்மதேவனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு நிகரானவன் என்ற ஆணவம் பிரம்மனுக்கு ஏற்பட்டது.Image 1537789இந்தக் குழப்பத்தைத் தீர்க்கவும், பிரம்மனின் ஆணவத்தை அடக்கவும் சிவன் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்தார். ஆனால், பிரம்மன் ஒரு பிராமணன் என்பதால் சிவபெருமானுக்கு 'பிரம்மஹத்தி தோஷம்' பிடித்தது. வெட்டப்பட்ட அந்தத் தலை சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்டது.Image 1537790சிவன் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்தத் தலை (கபாலம்) அவர் கையை விட்டு அகலவில்லை. சிவபெருமான் எப்போது உணவு உட்கொள்ள முயன்றாலும், அந்தக் கபாலம் உணவை முந்திக்கொண்டு தின்றுவிடும். இதனால் சிவன் கடும் பசியால் வாடி, மயானங்களில் அலைந்து திரிந்தார்.

தன் கணவரின் துயரத்தைக் கண்டு வருந்திய பார்வதி தேவி, மகாவிஷ்ணுவின் ஆலோசனையைப் பெற்றார். அவர் மகா சிவராத்திரிக்கு மறுநாள், சிவன் மயானத்திற்கு வரும்போது ஒரு தந்திரம் செய்தார்.அவர் பிரம்ம கபாலத்திற்காகச் சில உணவுகளைத் தயார் செய்து கீழே இறைத்தார். உணவின் மீது கொண்ட ஆசையால் சிவனின் கையை விட்டு அந்தக் கபாலம் கீழே இறங்கியது. அந்தச் சமயம் பார்த்து பார்வதி தேவி, 'அங்காள பரமேஸ்வரி'யாக விஸ்வரூபம் எடுத்து, அந்தக் கபாலத்தைத் தன் காலால் மிதித்து அழித்தார்.சிவனுக்குப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. இந்த நிகழ்வே 'மயான கொள்ளை' என்று கொண்டாடப்படுகிறது.Image 1537791பக்தர்கள் அம்மனைப் போலவே வேடமிட்டு (காளி, அங்காளம்மன்), ஆக்ரோஷமாக நடனமாடி மயானத்திற்குச் செல்வார்கள்.அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆக்ரோஷமாக மயானத்தில் நடனமாடும்போது, அவருக்குப் பாதுகாப்பாகவும், ஏவல் தெய்வங்களாகவும் விளங்குபவர்கள் மயானக் காளி, கருப்பண்ணசாமி, மற்றும் முனீஸ்வரன். ஆண்கள் இத்தகைய வேடங்களை ஏற்று, அம்மனின் படைகளாகத் தங்களைக் கருதிக்கொண்டு அங்காள பரமேஸ்வரி உருவம் தரித்த பெண்களுக்கு முன்னாள் வீதி உலா வருவர்,

சுருக்கமாகச் சொன்னால், பெண்கள் அம்மனின் 'அருள்' வடிவமாக மாறினால், ஆண்கள் அந்த அருளைக் காக்கும் 'வீர' வடிவமாக (காவல் தெய்வங்களாக) மாறித் திருவிழாவில் பங்கேற்கின்றனர்Image 1537792மயானத்தில் அம்மன் உருவத்தைச் சுதையில் (மண்ணில்) செய்து வைத்திருப்பார்கள். அங்குப் பூசாரிகள் தானியங்கள், பழங்கள், இனிப்புகள் போன்றவற்றைச் சூறையிடுவார்கள் (இறைப்பார்கள்). இதை மக்கள் பிரசாதமாகப் போட்டி போட்டுக்கொண்டு கொள்ளயைடிப்பர் அதவாது சேகரிப்பார்கள்.இதுவே மயானக் கொள்ளை

இந்தத் திருவிழாவின் மூலம் ஊரில் உள்ள தீய சக்திகள் விலகி, சுபிட்சம் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை.மயானத்தில் சேகரிக்கப்படும் உணவை வீட்டில் கொண்டு போய் வைத்து வழிபடுவர்.

இந்த விழா சென்னையில் நேற்று கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் விமரிசயைாக நடைபெற்றது

ஆண்கள் உடம்பெங்கும் எலுமிச்சை,பால் புகட்டும் பாத்திரம்,சிறிய விளக்கு என்று உடம்பெங்கும் குத்திக் கொண்டு கையில் அரிவாள் ஏந்தியபடி வந்தனர் இதில் சிறுவர்களும் உண்டு. பெண்கள் பலர் கையிலும் வாயிலும் உயிருள்ள கோழியை வைத்துக் கொண்டு அம்மனின் வேடமிட்டு வந்து ஆவேசமாக நடனமாடினர்.

நிகழ்வின் நிறைவாக மயானத்தில் சூறைவிடப்பட்ட பழங்கள் உள்ளீட்ட உணவுப்பொருட்களை பொதுமக்கள் சேகரித்து சென்றனர்.

- எல்.முருகராஜ்

படங்கள்- யுவராஜ்






      Dinamalar
      Follow us