PUBLISHED ON : பிப் 18, 2026 03:20 PM

மயான கொள்ளை என்பது தமிழகத்தில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளில் மாரியம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயங்களில் மகா சிவராத்திரிக்கு மறுநாள் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான திருவிழாவாகும்.
சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தது போலவே, ஒரு காலத்தில் பிரம்மதேவனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு நிகரானவன் என்ற ஆணவம் பிரம்மனுக்கு ஏற்பட்டது.

தன் கணவரின் துயரத்தைக் கண்டு வருந்திய பார்வதி தேவி, மகாவிஷ்ணுவின் ஆலோசனையைப் பெற்றார். அவர் மகா சிவராத்திரிக்கு மறுநாள், சிவன் மயானத்திற்கு வரும்போது ஒரு தந்திரம் செய்தார்.அவர் பிரம்ம கபாலத்திற்காகச் சில உணவுகளைத் தயார் செய்து கீழே இறைத்தார். உணவின் மீது கொண்ட ஆசையால் சிவனின் கையை விட்டு அந்தக் கபாலம் கீழே இறங்கியது. அந்தச் சமயம் பார்த்து பார்வதி தேவி, 'அங்காள பரமேஸ்வரி'யாக விஸ்வரூபம் எடுத்து, அந்தக் கபாலத்தைத் தன் காலால் மிதித்து அழித்தார்.சிவனுக்குப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. இந்த நிகழ்வே 'மயான கொள்ளை' என்று கொண்டாடப்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், பெண்கள் அம்மனின் 'அருள்' வடிவமாக மாறினால், ஆண்கள் அந்த அருளைக் காக்கும் 'வீர' வடிவமாக (காவல் தெய்வங்களாக) மாறித் திருவிழாவில் பங்கேற்கின்றனர்
இந்தத் திருவிழாவின் மூலம் ஊரில் உள்ள தீய சக்திகள் விலகி, சுபிட்சம் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை.மயானத்தில் சேகரிக்கப்படும் உணவை வீட்டில் கொண்டு போய் வைத்து வழிபடுவர்.
இந்த விழா சென்னையில் நேற்று கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் விமரிசயைாக நடைபெற்றது
ஆண்கள் உடம்பெங்கும் எலுமிச்சை,பால் புகட்டும் பாத்திரம்,சிறிய விளக்கு என்று உடம்பெங்கும் குத்திக் கொண்டு கையில் அரிவாள் ஏந்தியபடி வந்தனர் இதில் சிறுவர்களும் உண்டு. பெண்கள் பலர் கையிலும் வாயிலும் உயிருள்ள கோழியை வைத்துக் கொண்டு அம்மனின் வேடமிட்டு வந்து ஆவேசமாக நடனமாடினர்.
நிகழ்வின் நிறைவாக மயானத்தில் சூறைவிடப்பட்ட பழங்கள் உள்ளீட்ட உணவுப்பொருட்களை பொதுமக்கள் சேகரித்து சென்றனர்.
- எல்.முருகராஜ்
படங்கள்- யுவராஜ்

