PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

எல்லாவற்றையும் சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்தில் பொள்ளாச்சிக்கு என்று நடந்துவந்த சர்வதேச பலுான் திருவிழாவினை சென்னைக்கும் கொண்டு வந்துள்ளனர்.
அநேகமாக அதிகாலை 6 மணிககு நடந்த துவக்க விழா இதுவாகத்தான் இருக்கும்.விசாரித்த போது விழா நடைபெறும் மகாபலிபுரம் அருகில் உள்ள 'திருவிடந்தை' பகுதி கடற்கரையை ஒட்டியிருப்பதால், கடற்காற்று அப்போதுதான் அமைதியாக பலுானை பறக்கவிடுவதற்கு ஏதுவாக இருக்கும் என்றனர்.
அந்த பலுானில் உஷ்ணக்காற்றை நிரப்பியதும் வானை நோக்கி எழுந்தது அதனை பத்தடி உயரத்திற்கு பறக்கவிட்டு கயிறு கட்டி பிடித்துக் கொண்டனர் பலுான் இறங்குவது போல தெரிந்தால் உஷ்ணக்காற்றை நிரப்பிக் கொண்டனர்.
இந்த பட்டம் விடுவது பலுான் விடுவது போன்ற கேளிக்கையான விஷயங்களில் வியாட்நாம் மக்களுக்குத்தான் அதிகம் ஈடுபாடு.,இந்த சர்வதேச பலுான் விழாவிலும் அவர்களது ஆதிக்கமே அதிகம் இருந்தது.
-எல்.முருகராஜ்