PUBLISHED ON : நவ 18, 2025 08:42 PM

பசவனகுடியை உற்சாகமாக்கும் பாரம்பரிய கொண்டாட்டம்
கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், பெங்களூரின் பாரம்பரியத்தையும் விவசாய மரபையும் ஒருங்கே கொண்டாடும் கடலைத் திருவிழா இந்த ஆண்டும் பசவனகுடி பகுதியில் ஆனந்தமாகத் தொடங்கியுள்ளது.
அடிப்படையில் இது கடலையின் முதல் அறுவடை கொண்டாட்டம். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் முதல் அறுவடை கடலையை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். விற்பனைக்கு முன் அவர்கள் அந்த கடலையை நந்தி பகவானுக்கு சமர்ப்பிப்பது இந்த விழாவின் முக்கிய மரபாகும்.
அப்போது தொடங்கிய இந்த வழக்கம் வருடாந்திர திருவிழாவாக வளர்ந்து இன்று நகரின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகியுள்ளது. விழா பொதுவாக கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை ஒரு நாள் நடைபெற்றாலும், நாளடைவில் கடலையை மையமாக வைத்து பிற பொருட்களும் சந்தைப்படுத்தப்படத் தொடங்கியதால், இப்போது ஐந்து நாட்கள் நடைபெறும் பெரிய திருவிழாவாக மாறியுள்ளது. இந்த ஐந்து நாட்களிலும் கலை விழாக்கள், உணவு சந்தை, பொருட்காட்சி போன்றவை நடைபெற்று, பசவனகுடி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

— எல். முருகராஜ்

