PUBLISHED ON : மார் 11, 2026 05:08 PM

இன்றைய தேதியில் தேசத்தின் தேசியப் பிரச்சினை எதுவென்று கேட்டால், எல்லைப் பாதுகாப்பு அல்ல; அது சமையல் எரிவாயு உருளைக்கான தட்டுப்பாடுதான். பாரத தேசமே ஒரு சிலிண்டருக்காக வீதியில் இறங்கி அலைபாய்கிறது.


தங்கம் விலை உயர்ந்ததை விட இந்த இரண்டே நாளில் சிலிண்டர் விலை கருப்பு சந்தையில் ஜெட் வேகத்தில் விர்ரென்று உயர்ந்து கொண்டு போகிறது
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட இயற்கை உணவுப் பிரியர்கள், 'அடுப்பே இல்லாமல் அவல் உணவு செய்வது எப்படி? நெருப்பு இல்லாமல் நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி?' என்ற பயிற்சி வகுப்புக்கு வருமாறு அழைப்பு விடுகின்றனர்.
-எல்.முருகராஜ்

