இந்தப் பேரணி வெறும் போராட்டமாக மட்டுமன்றி, அன்பின் கொண்டாட்டமாகவும் அமைந்தது.
வண்ணமயமான ஆடைகள், கைகளில் வானவில் கொடிகள் எனத் திரண்டிருந்த திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள், தங்களுக்குரிய சமமான அங்கீகாரத்தை வேண்டி முழக்கமிட்டனர். 'காதல் என்பது அனைவருக்கும் பொதுவானது' என்பதை உரக்கச் சொல்லும் விதமாக, இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் தங்களின் துணைகளோடும், அன்புக்குரியவர்களோடும் உணர்ச்சிகரமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பேரணியின் ஊடே, பல ஜோடிகள் தங்களின் அன்பைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினர். நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு தங்களுக்குக் கிடைத்துள்ள இந்தச் சுதந்திரத்தை அவர்கள் நெகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஒருவரையொருவர் கட்டியணைத்தும், கைகளைப் பிணைத்தும் அவர்கள் காட்டிய அன்பு, அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாடுகளைக் களைந்து, மனிதநேயத்தை முன்னிறுத்துவதே இத்தகைய பேரணிகளின் முக்கிய நோக்கமாகும். அன்பின் தூய்மையையும், மாற்றத்தை நோக்கிய அந்தச் சமூகத்தின் ஏக்கத்தையும் பேரணியில் கலந்து கொண்டவர்களின் முகங்கம் காட்டின
பாலின அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு, 'அன்பே அனைத்தும்' என்ற தத்துவத்தை மெய்ப்பிக்கும் வகையில் டெல்லி பேரணி அமைந்திருந்தது. இது ஒரு வர்க்கத்தின் உரிமைக்கான குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் சமத்துவத்திற்கான அடையாளமுமாகும்.