தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/ நிர்ஜலா ஏகாதசி

நிர்ஜலா ஏகாதசி

நிர்ஜலா ஏகாதசி


PUBLISHED ON : ஜூன் 25, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2026 07:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்து மத வழிபாட்டில், ஓராண்டில் வரும் 24 ஏகாதசிகளில் மகா உன்னதமானதும், மிகக் கடுமையானதும், புனிதமானதுமானது 'நிர்ஜலா ஏகாதசி' திருநாளாகும். 'நிர்ஜலா' என்றால் 'நீர் இல்லாத' என்று பொருள்.

முக்கண்ணனின் அருளைப் பெற எண்ணும் சிவபக்தர்கள், இந்த நாளில் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமலும், உணவை முற்றிலும் தவிர்த்தும் அக்னிப் பரீட்சை போன்ற மிகக் கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். வருடம் முழுவதும் வரும் மற்ற அனைத்து ஏகாதசி விரதங்களையும் தனித்தனியாகக் கடைப்பிடிக்க முடியாதவர்கள், இந்த ஒரு ஏகாதசி விரதத்தை நெறிமுறையோடு இருந்தால், ஒட்டுமொத்த ஏகாதசிகளின் புண்ணிய பலன்களும் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.Image 1591873இந்த மகா சுபதினத்தில், காசித் திருத்தலத்தில் வீற்றிருக்கும் விஸ்வநாதப் பெருமானுக்குப் பேரானந்தச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அன்னை கங்கை நதியில் இருந்து அள்ளி வரப்பட்ட புனித நீரை, ஜொலிக்கும் தங்கக் கலசங்களில் ஏந்தி, வேத மந்திரங்கள் முழங்க, பூசாரிகளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் பக்திப் பரவசத்துடன் காசி விஸ்வநாதர் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர்.Image 1591874இந்த ஆன்மீகப் பெருவிழாவை மேலும் பக்திப் பூர்வமாகவும், கண்கொள்ளாக் காட்சியாகவும் மாற்ற, உள்ளூர் கலைஞர்கள் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி போலத் தத்ரூபமாக வேடமணிந்திருந்தனர்.அவர்கள் சிவனின் பிரியமான வாகனமான காளையின் (நந்தி) பிரம்மாண்ட உருவப் பொம்மையில் அமர்ந்து, பக்தர்கள் சூழ பவனி வந்த காட்சி, கைலாயமே பூமிக்கு இறங்கி வந்தது போன்ற பேரனுபூதியை ஏற்படுத்தியது. காசியின் பாரம்பரிய வாத்தியங்கள் மற்றும் டமருகத்தின் (உடுக்கை) அதிரடி நாதத்திற்கு ஏற்ப, பக்தர்கள் மெய்மறந்து ஆடியபடி ஊர்வலமாக வந்தது காசியின் உன்னத கலாச்சார அடையாளத்தை உலகிற்குப் பறைசாற்றியது.Image 1591875கோடைகாலத்தின் கத்தரி வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் இந்த விரதம் அமைவதால், இந்த நாளில் பசி, தாகத்தோடு இருப்பவர்களுக்கு உதவுவது கோடிப் புண்ணியத்தைத் தரும்.அதனை உணர்த்தும் வகையில், காசிக்கு வந்திருந்த ஏழை எளியவர்களுக்கும், தாகத்தால் தவித்த பொதுமக்களுக்கும் சிவபக்தர்கள் அன்போடு குடிநீர், குளிர்ச்சியான மோர், சுவையான பழச்சாறுகள் மற்றும் விசிறிகளைத் தானமாக (தர்மமாக) வழங்கி தங்களின் ஆன்மீகக் கடமையை நிறைவு செய்தனர்.

'ஹர ஹர மகாதேவ்' என்ற பக்தர்களின் முழக்கம் காசி மாநகரையே ஆன்மீகக் கடலில் மூழ்கடித்தது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us