PUBLISHED ON : மார் 07, 2026 10:02 PM

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, 70க்கும் மேற்பட்ட பெண் ஓவியர்கள் பங்கேற்றுள்ள இரண்டு நாள் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை, எழும்பூரில் அருங்காட்சியகத்தில் நேற்று துவங்கியது.இதில், பெண்களை மையப்படுத்தி பல்வேறு கருப்பொருளில், நம் கண்முன்னே ஓவியங்கள் வரைகின்றனர்.
பெண்கள் ஒன்று கூடி, ஓவிய கலை வாயிலாக, அவர்களின் தனித்திறமைகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பெண் ஓவிய கலைஞர்களான இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.






