sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

நாங்கள் அக்னி வீரர்கள்..

/

நாங்கள் அக்னி வீரர்கள்..

நாங்கள் அக்னி வீரர்கள்..

நாங்கள் அக்னி வீரர்கள்..

1


PUBLISHED ON : ஜூன் 05, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 05, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1278480
மத்திய அரசின் சார்பில் இந்திய பாதுகாப்புத் துறைக்கு 'அக்னி வீர்' என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது . அக்னி பாத்(அக்னி பாதை) என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் 'அக்னி வீர் ' எனப்படும் வீரர்,வீராங்கனைகள் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.

Image 1278482
தரைப்படை,கப்பல் படை,விமானப் படை என்று முப்படை பிரிவுகளிலும் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ள இவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள ராணுவ பயிற்சி நிலையங்களில் 22 வாரங்கள் பயிற்சி வழங்கப்பட்டது.

Image 1278484


சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் விமானப்படை பணிக்கு சேர்க்கப்பட்ட அக்னி வீரர்களின் முதல் பேட்ஜ் பயிற்சி முடித்து அணிவகுப்பு நடத்தினர்.பாசிங் பாரேட் என்று சொல்லப்படும் இந்த நிகழ்சியின் இவர்கள் எடுத்த பயிற்சியினையும் நிகழ்த்திக் காட்டினர்.

இந்த புதிய பணி நியமன முறைக்கு இன்று ஒப்புதல் அளித்தது. இந்த புதிய பணி நியமன முறை ராணுவத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும், ராணுவத்தில் இளைஞர்கள் சேர ஊக்குவிக்கும். இந்திய ராணுவம் எப்போதும் இளமையானதாக இருக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை இது உருவாக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

முப்படை தளபதிகள் மூலம் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியிடம் இந்த திட்டம் குறித்து முப்படை தளபதிகள் விளக்கிய நிலையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

மொத்தம் 45 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு வயது வரம்பு 17.5 - 21 வயது வரை இருக்கும். 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அவர்களுக்கு மெடிக்கல் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளும் வழங்கப்படும். 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்

இதில் நிரந்தர பணிக்கு தேர்வாகாத மீதம் உள்ள 75 சதவிகித அக்னி வீர் வீரர்கள்.. பென்ஷன் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

இந்த அக்னி பாத் திட்டம் மூலம் சேரும் ராணுவ வீரர்களுக்கு சம்பளம் மற்ற நிரந்தர வீரர்களை விட குறைவாக இருக்கும். அதேபோல் இவர்களுக்கு பென்சன் கிடையாது. இதன் காரணமாக கூடுதல் ராணுவ வீரர்கள் குறைந்த நிதி செலவில் ராணுவத்தில் பணியில் இருப்பார்கள். இதன் காரணமாக மத்திய அரசுக்கு செலவு மிச்சம் ஆகும். இதனால் மிச்சமாகும் தொகையை ராணுவ தளவாட பொருட்கள் வாங்க பயன்படுத்த முடியும் என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us