sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 30, 2026 ,தை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

தாயம்மா

/

தாயம்மா

தாயம்மா

தாயம்மா

1


PUBLISHED ON : நவ 27, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 27, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1350590 தாயம்மா என்பவர் பெண் தெய்வமாக பல இடங்களில் வழிபாடு செய்யப்படுகிறார்.

அப்படி வழிபாடு செய்யப்படும் இடங்களில் ஒவியமாகவோ சிற்பமாகவோ அவரது உருவம் இருக்கும் பெரும்பாலும் அந்த உருவமே வழிபடும் தெய்வமாகவும் இருக்கும்.

ஆனால் உருவமின்றி ஒரு இடத்தில் தாயம்மா என்பவர் வழிபாடு செய்யப்படுகிறார்.

அந்த இடம் சென்னை வியாசர்பாடியில் உள்ள கர பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலய வளாகமாகும்.

இங்கு ஒன்பதிற்கும் அதிகமான சித்தர்கள் அடங்கியுள்ளதாக இங்குள்ள சாமியார்கள் கூறுகின்றனர்.

அவர்களில் ஒருவராக தாயம்மாவை குறிப்பிடுகின்றனர்.Image 1350591அவருக்கான சமாதியின் மீது கட்டப்பட்ட சன்னதியை பராமரிக்கும் சுந்தர் என்பவர் கூறுகையில், இங்கு யார் வந்தாலும் முதலில் அவர்களது கையில் ஒரு துடைப்பத்தைக் கொடுத்து கோவிலின் சிறிய வளாகத்தை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யச் சொல்வோம்.

ஒரு பொது இடத்தை இப்படி சுத்தம் செய்யும் போது, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இந்த இடத்தில் தான் ஒரு சாதாரண ஆளே என்பதை உணர்ந்து பக்தியை நாடுவார்.

இந்த இடம் உள்பட இங்குள்ள பல ஏக்கர் இந்த தாயம்மாவிற்குதான் சொந்தம், அவர்தான் பல ஞானிகளை இங்கு வரவழைத்து தங்கவைத்து அழகு பார்த்தார்.

அந்த ஞானிகளின் பெயரிலேயே தனது இடத்தை தானமாகவும் வழங்கினார்.

எனக்கு என்று ஒரு உருவமோ ஒவியமோ சிற்பமோ இருக்கக்கூடாது நான் செய்த செயல்கள்தான் பக்தர்களுக்கு நினைவில் இருக்க வேண்டும் சுருங்கச் சொல்வதானால் என் முகத்தை விட அகமே பெரிதாக போற்றப்பட வேண்டும் என்று எல்லா சொத்துக்களையும் தானமாக வழங்கிவிட்டு இங்கு ஒரு துறவியைப் போல வாழ்ந்து சமாதியானார்.

அவரது சமாதியின் மீது கட்டப்பட்டதுதான் இந்த தாயம்மா சன்னதி.

-எல்.முருகராஜ்.






      Dinamalar
      Follow us