PUBLISHED ON : ஜன 20, 2025 12:00 AM

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உலக புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.சென்னை-செங்கல்பட்டு ரோட்டில், கூட்டுரோடு பிரிவு வழியாக இங்கு செல்லலாம்.
இங்குள்ள ஏரி 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.இந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, 16 அடி உயரம் நீர் பிடிப்பு கொண்டு ஏரி முழு கொள்ளளவு கொண்டுள்ளது.
இப்போது கூகுள் மேப் வசதி இருப்பதால் எங்கு இருந்தும் எளிதில் இங்கு வரலாம்,குழந்தைகளுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும் என்பதால் குழந்தைகளை அழைத்து வாருங்கள் அனுமதி கட்டணம் உண்டு, கேமராவிற்கு தனிக்கட்டணம். கையோடு பைனாகுலர் கொண்டு வந்தால் பறவைகளை நெருக்கத்தில் பார்த்து ரசிக்கலாம்.
-எல்.முருகராஜ்