sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சிந்திப்போமா

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : டிச 30, 2024 10:39 PM

Google News

ADDED : டிச 30, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிசம்பர் 31, 1947

கன்னியாகுமரி மாவட்டம், வீரநாராயணமங்கலம் எனும் ஊரில், கணபதியா பிள்ளை - சரஸ்வதிதம்பதியின் மகனாக, 1947ல் இதே நாளில் பிறந்தவர் சுப்பிரமணியம் எனும் நாஞ்சில் நாடன்.

இவர் பள்ளிப் படிப்பை முடித்து, திருவிதாங்கூர் இந்து கல்லுாரி, திருவனந்தபுரம் மஹாத்மா காந்தி நினைவு கல்லுாரிகளில் படித்தார். மும்பை, தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் விற்பனை முகவராக பணியாற்றினார். பம்பாய் தமிழ்ச்சங்க மலரில் ஆசிரியராக பணியாற்றினார். பல இதழ்களுக்கு சிறுகதைகளை எழுதினார்.

கலைக்கூத்தன், வண்ணதாசன் வற்புறுத்தியதால்நாவல் எழுதினார். இவரது, 'தலைகீழ் விகிதங்கள்' நாவல், சொல்ல மறந்த கதை என்ற திரைப்படமானது.பரதேசி திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். 'சூடிய பூ சூடற்க' என்ற சிறுகதை தொகுப்புக்காக, சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவரது பல நுால்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது 77வது பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us