/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
கம்பு எடுத்தா சொல்லி அடிப்பேன்!
/
கம்பு எடுத்தா சொல்லி அடிப்பேன்!
ADDED : மார் 15, 2026 05:28 AM

தி னேஷ், அரசு ஊழியர். கவுண்டம்பாளையத்தில் குடும்பத்தோடு வசிக்கிறார். சொந்த ஊர் மதுரை அருகே கீழக்குயில்குடி.
தந்தை சுப்ரமணியன், பரம்பரையாக சுற்றுவட்டார மக்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுப்பவர். அவரிடம் சிலம்பம் கற்றிருக்கிறார் தினேஷ்.
ஆறுமுகம் என்பவருடன் கைகோர்த்து, அலுவலக பணிக்கு இடையே காலை இரவு என 3 மணி நேரம் 80 குழந்தைகளுக்கு சிலம்பம் கற்று கொடுப்பதாக சொல்கிறார்...
அலங்கார சிலம்பம், போர் சிலம்பம்னு ரெண்டு இருக்கு. பெரும்பாலும் அலங்கார சிலம்பம் கத்து கொடுக்குறாங்க. அது போதாது. போர் சிலம்பம் கத்துக்கிடணும். சிலம்பத்தில் ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல் இருக்கு. சுருள் வாள், வேல் கம்பு, மான் கொம்பு, அடி முறை என்பதெல்லாம் சிலம்பத்தில் இருந்து அடுத்தடுத்து வந்தது.
கேலோ இந்தியா, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் சிலம்ப போட்டி நடத்துறாங்க. ஜெயிக்கறவங்களுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு வேலைவாய்ப்பும் கிடைக்குது. சிலம்பத்தை தற்காப்புக் கலையாக கத்துக் கொடுக்க பெற்றோர் ஊக்கப்படுத்தணும் என்கிறார் தினேஷ்.

