sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

செய்திகள்

/

78வது இலங்கை சுதந்திர தினம் அனுஷ்டிப்பு

/

78வது இலங்கை சுதந்திர தினம் அனுஷ்டிப்பு

78வது இலங்கை சுதந்திர தினம் அனுஷ்டிப்பு

78வது இலங்கை சுதந்திர தினம் அனுஷ்டிப்பு


பிப் 04, 2026

Google News

பிப் 04, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

78வது இலங்கை சுதந்திர தினம் அனுஷ்டிப்பு
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது சுதந்திர தினம் இன்று (04) புதன்கிழமை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் முன்றலில் கொண்டாடப்பட்டது.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா, ஜமாஅத்தினர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாரக் தேசிய கொடி ஏற்றினார்.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், பைதுஸ் ஸகாத் நிதியம், வர்த்தக சங்கம் மற்றும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுதந்திர நிகழ்வானது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், பைதுஸ் ஸகாத் நிதியம் மற்றும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கம் ஆகியவற்றின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாரக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், சாய்ந்தமருது போலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஜே.டி.சில்வா உட்பட ஜும்ஆப் பள்ளிவாசலின் செயலாளர், பொருளாளர் உட்பட கௌரவ நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், அதன் நிர்வாக உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஏனைய பள்ளிவாசல்களின் தலைவர், செயலாளர், பொருளாளர், உலமாக்கள், வர்த்தக சங்க செயலாளர், பொருளாளர் மற்றும் அதன் உறுப்பினர்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா, ஜமாஅத்தினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பைதுஸ் ஸகாத் நிதியத்தின் பிரதித் தலைவர் ஐ.எல்.எம். ரஃபி (ஹிழ்ரி)யினால் நாட்டின் சுபீட்சத்துக்காக துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
- இலங்கையில் இருந்து எம்.எஸ்.எம்.ஸாகிர்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us