/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
மலேசியாவில் கவிதை நூல் அறிமுக விழா
/
மலேசியாவில் கவிதை நூல் அறிமுக விழா

மலேசியாவில் கவிச்சோலை மரபு என்ற கவிதை நால் வெளியீட்டு விழா இல.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூலாசிரியர் கவிஞர் பெ.க.நாராயணன் ஏற்புரை வழங்கினார். கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத் தலைவர் முனைவர் க.உதயகுமார், நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் திருப்பதி சுப்பிரமணியம் சிறப்புரைஆற்றினர். நிகழ்ச்சியின் நெறியாளராக கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கச் செயலாளர் காந்தி முருகன் பணியாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் பினாங்கு மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் குமரனார், கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்க உட்கணக்காய்வாளர் செகு எம்.எ.ராமசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணன் கொழுந்துரை முத்தமிழ் பெரும் புலவர் இராமதாசரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Advertisement

