sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

அபுதாபியில் லைலத்துல் கத்ர் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு

/

அபுதாபியில் லைலத்துல் கத்ர் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு

அபுதாபியில் லைலத்துல் கத்ர் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு

அபுதாபியில் லைலத்துல் கத்ர் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு


ஏப் 04, 2025

Google News

ஏப் 04, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபுதாபி: அபுதாபி வாழ் தமிழ் இஸ்லாமிய சமூகத்தினர் ஒன்று கூடும் மாபெரும் லைலத்துல் கத்ர் இரவு நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. அபுதாபில் இயங்கும் அய்மான் சங்கம், லால்பேட்டை ஜமாஅத், மௌலித் கமிட்டி, அபுதாபி ஜமாஅத்துல் உலமா பேரவை, மர்ஹபா சமூக நலப் பேரவை, காயல் நல மன்றம் உட்பட பல சமூக அமைப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அபுதாபியில் இயங்கி வரும் பனியாஸ் பில்டிங் மெட்டீரியில் குழுமத்தின் தலைவர் நாகூர் அப்துல் ஹமீத் ஹாஜியார் மற்றும் நோபல் குழுமத்தின் இயக்குனர் எம்.ஸாஹுல் ஹமீது தலைமையில் 'லைலத்துல் கத்ர் கமிட்டி' என்ற அமைப்பை உருவாக்கி அதன் கீழ் பல வருடங்களாக லைலத்துல் கத்ர் இரவை சிறப்பான முறையில் இறையருளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இந்த வருடமும் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் லைலத்துல் கத்ர் மாபெரும் ஒன்று கூடல் பனியாஸ் பில்டிங் மெட்டீரியில் குழுமத்தின் தலைவர் நாகூர் அப்துல் ஹமீத் ஹாஜியார் தலைமையில், நோபல் குழுமத்தின் நிறுவனர் எம்.ஸாஹுல் ஹமீதுமுன்னிலையில், அபுதாபியின் அதீப் குழுமம் (ADEEB Group), பிற நிறுவனங்களும் இணைந்து மிகச் சிறப்பான முறையில் நிகழ்ந்தது.


துவக்கமாக 08:15 மணிக்கு இஷா தொழுகையோடு தொடர்ந்து தராவிஹ் 20 ரகாஅத் தொழுகையும் நடந்தது. அதன் தொடர்ச்சியாக தஸ்பீஹ் தொழுகையும் நடந்தது. நிகழ்வின் சிறப்பான அமர்வாக சென்னை அடையார் அல்ஹுதா அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் டாக்டர் சதீதுத்தீன் பாகவி ஹஸ்ரத் சிறப்பு பயான்கள் நடந்தது.


கூடுதலாக இவர் கடந்த பத்து தினங்களாக ரமளான் பிறை 17-ஆம் பத்ரியீன்கள் தினத்திலிருந்து 'லைலத்துல் கத்ர்' கமிட்டியினரால் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் பயான் நிகழ்வில் தன்னுடைய சிறப்பான நாவன்மையால், சொல்லாற்றலால் பல்வேறு தலைப்புகளில் பலரும் மனமுருகும் வண்ணம் சிறப்பான உரையினை தந்தார்.


இதில் தமிழகத்தின் பல ஊர்களைச் சார்ந்தவர்கள் திரளான முறையில் கலந்து கொண்டு பயனடைந்தனர். லைலத்துல் கத்ர் இரவு நிகழ்வில் ஹஸ்ரத்தின் சிறப்பு பயானிற்கு பிறகு அபுதாபி ஜமாஅத் உலமா தலைவர் காயல்பட்டிணம் மௌலவி எஸ்.எம்.பி. ஹூஸைன் மக்கி மஹ்ழரி தவ்பா துஆ என்னும் பாவ மன்னிப்பு பிராத்தனை 30 நிமிடம் நிகழ்ந்தது. இதில் உலக அமைதிக்காக வேண்டியும், உலக மாந்தர்கள் அனைவருக் இன்புற்றிருக்க சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.


நிகழ்வின் இறுதியாக பெருமானார்(ஸல்) அவர்களின் மீது அருள் இறங்கும் ஸலவாத்தோடு நிகழ்ச்சிகள் இறையருளால் நிறைவடைந்தது. சங்கையான லைலத்துல் கத்ர் இரவு நிகழ்வில் 'அபுதாபியில் ஒரு தமிழகமா' என்று வியக்கும் வண்ணம் தமிழ் இஸ்லாமியர்கள் 1500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பெருந்திரளாக குடும்பம், குடும்பமாக ஒன்று கூடி தாயகத்தில், சொந்த ஊரில் இருப்பது போல் மகிழ்ந்து கலைந்து சென்றார்கள்.


தொலை தூரத்திலிருந்து வருகை தந்த தொழிலாளர்களுக்கு அபுதாபியின் பல பகுதிகளில் வாகன வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் அதன் நிர்வாகிகளின் வழிகாட்டுதலோடு பிற அமைப்புகளும் இணைந்து ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் செய்திருந்தனர்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us