/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பெண்களுக்கான புதிய கூட்டமைப்பு ஜெத்தாவில் ஆரம்பம்
/
பெண்களுக்கான புதிய கூட்டமைப்பு ஜெத்தாவில் ஆரம்பம்
பிப் 04, 2025

ஜெத்தாவில் Empowering Women's Alliance (EWA) என்ற பெண்கள் கூட்டமைப்பு அல் அபீர் மருத்துவ மையத்தில் துவக்கப்பட்டு இலச்சினை வெளியிடப்பட்டது. சலீனா முஸாபிர் தலைமையில் நடந்த நிகழ்வை, ஷமி ஷபீர் (MD, Multisystem Logistics ) துவக்கி வைத்தார். கபீர் கோண்டோட்டி சுகாதார விழிப்புணர்வு உரையாற்றினார். அதில், பல்வேறு உடல் சுகாதார பிரச்சினைகள், மன அழுத்தம் மற்றும் அதன் தீர்வுகள் பற்றிய விரிவாக எடுத்துரைத்தார்.
அல் அபீர் மருத்துவ மையத்தின் சிறப்பு மருத்துவ அட்டை குறித்து அலி தேக்குத்தொடு விளக்கி வெளியிட, அதனை உறுப்பினர்கள் சார்பாக சோபியா சுனில் பெற்றுக்கொண்டார். அமைப்பின் இலச்சினையை வடிவமைத்த நிஸார் மடவூர் அனைவரும் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில், ஜோதி பாபு குமார், ஷரீப் அரக்கல், நிசார் மடவூர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சோபியா சுனில் வரவேற்புரை வழங்க, ரூஃபானா ஷிபாஸ் நன்றி தெரிவிக்க நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. - நமது செய்தியாளர் M.Siraj
Advertisement