sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஷார்ஜாவில் இந்திய குடியரசு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி

/

ஷார்ஜாவில் இந்திய குடியரசு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி

ஷார்ஜாவில் இந்திய குடியரசு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி

ஷார்ஜாவில் இந்திய குடியரசு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி


ஜன 29, 2025

Google News

ஜன 29, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷார்ஜா: ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் துபாய் தர்பார் யூடியூப் குழுவின் சார்பில் இந்தியாவின் 76 வது குடியரசு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு 'சரித்திரம் பேசு' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடந்தது.

துபாய் தர்பார் யூடியூப் குழுவின் தலைவர் சொக்கம்பட்டி முஹம்மது கபீர் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இந்திய மாணவ, மாணவியர் இந்திய சுதந்திர போராட்ட வரலாறை தெரிந்து கொள்ள உதவும் வகையில் 'சரித்திரம் பேசு' என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான இடவசதியை வழங்கிய ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக தலைவர் டாக்டர் ஜனகன் விநாயகமூர்த்தி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.


கல்லிடைக்குறிச்சி சமூக ஆர்வலர் முனைவர் ஆ. முகமது முகைதீன், மாணவ, மாணவியரின் திறமைகளை மேம்படுத்த இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த துபாய் தர்பார் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.


கல்வியாளர் லதா ராமகிருஷ்ணன் மழலைச் செல்வங்களின் பேச்சை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீரமங்கை வேலுநாச்சியார் உள்ளிட்டோரை நேரில் பார்ப்பது போல் உள்ளது என்றார்.


ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக பேராசிரியர் முஹிப்புல்லா, இலங்கையை நான் சேர்ந்தவனாக இருந்தாலும் இந்தியாவின் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி சிறப்பான வாய்ப்பாக அமைந்திருந்தது என்றார்.


திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், நிர்வாகச் செயலாளர் மன்னர் மன்னன், கட்டுமாவடி பைசல் ரஹ்மான், ஊடவியலாளர் முதுவை ஹிதாயத், சொக்கம்பட்டி முஸ்தபா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.


திண்டுக்கல் கவிஞர் நாகூர் பிச்சை குடியரசு தின கவிதை வழங்கினார். கீழக்கரை சமூக ஆர்வலர் முஹம்மது ராசிக் சமூக நல பணிகளை பாராட்டும் வகையில் பொன்னாடை வழங்கி கவுரவிக்கப்பட்டார்.


பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை, பாராட்டு சான்றிதழ், சிட்டுக்குருவி நூல் ஆகியவை வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் குடியரசு தினத்தையொட்டி கேக் வெட்டப்பட்டது. இலங்கை தமிழ் மாறன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவியர் தங்களது பெற்றோர்களுடன் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us