sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஷார்ஜாவில் உலக சுற்றுச்சூழல் தின போட்டிகள்

/

ஷார்ஜாவில் உலக சுற்றுச்சூழல் தின போட்டிகள்

ஷார்ஜாவில் உலக சுற்றுச்சூழல் தின போட்டிகள்

ஷார்ஜாவில் உலக சுற்றுச்சூழல் தின போட்டிகள்


ஜூன் 11, 2024

Google News

ஜூன் 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷார்ஜா : ஷார்ஜா கோரல் பீச் ரெசார்ட் நிர்வாகம் மற்றும் கிரீன் குளோப் அமைப்பு ஆகியவை இணைந்து உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான 'Recycled Materials Comepition' அதாவது மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களுக்கான போட்டிவெகு சிறப்பாக நடைபெற்றது.

தொடக்கமாக பார்வையற்ற தமிழக மாணவர் ஈசா அப்துல் ஹாதி இறைவசனங்களை ஓதினார்.


மறுசுழற்சி முறையை கையாளுவதன் மூலமாக நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் குப்பைக் கழிவுகளைக் குறைக்கவும் வலியுறுத்தி மாணவர்களுக்கு மத்தியில் ஓர் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.


இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கிஃப்ட் வவுச்சர்கள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை ஓட்டல் அதிகாரி இஃப்திகார் வழங்கினார்.


போட்டிக்கான ஏற்பாடுகளை கிரீன் குளோப் அமைப்பின் தலைவி மதுரை ஜாஸ்மின் அபுபக்கர், அல்மாஸ் உள்ளிட்ட குழுவினர் சிறப்பிடம் செய்திருந்தனர். நிகழ்ச்சியை ஹாரித் முகம்மது, ஹமத் ஆமிர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.


விழாவில் கூத்தாநல்லூர் தாஹிர், தேவிபட்டிணம் நிஜாம், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், கடலூர் திருநாவுக்கரசு, கடற்கரை பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.


ஓட்டல் நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளையும் மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். குறிப்பாக ஓட்டல் நிர்வாகிகளுக்கு தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் வழங்கப்படும் நடைமுறை நிறுத்தப்பட்டு கண்ணாடி பாட்டில்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us