sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விமர்சிப்பதில் உள்ள ஆர்வத்தை பாராட்டுவதிலும் காட்டுங்கள் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

/

விமர்சிப்பதில் உள்ள ஆர்வத்தை பாராட்டுவதிலும் காட்டுங்கள் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

விமர்சிப்பதில் உள்ள ஆர்வத்தை பாராட்டுவதிலும் காட்டுங்கள் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

விமர்சிப்பதில் உள்ள ஆர்வத்தை பாராட்டுவதிலும் காட்டுங்கள் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்


ADDED : மே 06, 2025 11:52 PM

Google News

ADDED : மே 06, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''சில ஊடகங்கள் விமர்சிப்பதில் காட்டும் ஆர்வத்தை, நல்ல திட்டங்களை பாராட்டுவதில் காண்பிப்பதில்லை. பாராட்டுவதில் மட்டும் மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்றன'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க., அரசு பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது:

கடந்த 2021ல், ஆறாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமைந்தது. மே, 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றேன். தி.மு.க., அரசு ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தேர்தல் அறிக்கையில் கூறியதில், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். அதில், சொல்லாத பல திட்டங்களையும், தொலை நோக்குப் பார்வையோடு, நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு நாளும், புதிய திட்டங்களை அறிவிக்கிறோம்; நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சாதனை திட்டத்தின் துவக்க நாளாக இருந்து கொண்டிருக்கிறது. எந்த மாதிரியான சூழலில், ஆட்சி பொறுப்பை ஏற்றோம் என்பது, எல்லோரையும் விட பத்திரிக்கையாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

முந்தைய ஆட்சியாளர்களால் சீரழிந்த, பத்தாண்டு கால நிர்வாகம் ஒரு பக்கம்; மதவாதம் உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களுக்கு இடமளித்து, இந்திய நாட்டை சீரழித்து கொண்டிருக்கக்கூடிய நிலை ஒரு பக்கம்; தமிழகத்துக்கு எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுக்கும், மத்திய அரசு இன்னொரு பக்கம்; இதையெல்லாம் சமாளித்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான், எனக்குள் இருந்தது. சரியான இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி உறுதியாக பயணித்து, நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு, இந்த நான்காண்டு கால அரசே சாட்சியாக அமைந்திருக்கிறது. அரசுகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று கொள்கை அரசு; இன்னொன்று சேவை அரசு.

தி.மு.க., அரசை பொறுத்தவரை, கொள்கை - சேவை என இரண்டிலும், சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது. நான்காண்டுகளில் எப்படிப்பட்ட நெருக்கடிகள் வந்தன. எவ்வளவு அவதுாறுகள் பரப்பப்பட்டன என்பது, பத்திரிகையாளர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், எந்த இடத்திலும், நாங்கள் கொள்கையில் தடம் மாறவில்லை. எந்த சூழ்நிலையிலும், மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் சோர்ந்து போகவில்லை. அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில், பத்திரிகையாளர்களின் பங்கு மிக அதிகம்.

என்னை பொறுத்தவரை, விமர்சனங்களை முன் வைத்தால், அதை ஆக்கபூர்வமாக ஏற்றுக் கொள்கிறவன். ஆலோசனைகள் இருந்தால், அதை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டிருக்கிறேன். இந்தியாவிற்கே முன்மாதிரியாக பல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். நம்முடைய திட்டங்களை பார்த்து, பல்வேறு மாநில அரசுகள், அவர்கள் மாநிலங்களிலும் செயல்படுத்துகின்றன.

அப்படிப்பட்ட திட்டங்களை, பத்திரிகையாளர்கள் மனப்பூர்வமாக பாராட்ட வேண்டும். விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. என்னுடைய, 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையே விமர்சனங்களால் செதுக்கப்பட்டுள்ளது. எல்லோருடைய கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.

ஆனால், சில ஊடகங்கள் விமர்சிப்பதில் காட்டும் ஆர்வத்தை, நல்ல திட்டங்களை பாராட்டுவதில் காண்பிப்பது இல்லை. எல்லோரையும் சொல்லவில்லை. பாராட்டுவதில் மட்டும் மென்மையான போக்கை கடைபிடிக்கின்றனர். அது ஏன் என்று தெரியவில்லை. பாராட்ட வேண்டியதை பாராட்டினால் தான், விமர்சனத்திற்கான மரியாதையும், மதிப்பும் கிடைக்கும். எனவே, தயங்காமல் விமர்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்ட வேண்டும்.

தனிப்பட்ட ஸ்டாலினையோ, தி.மு.க., அரசையோ பாராட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழகத்தை பாராட்டுங்கள் என்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சியையும், தனித்துவத்தையும் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், துணைமுதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் துறை செயலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us