
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடந்ததை பற்றி வருந்தாதே. எதிர்காலத்தை பற்றி கற்பனை செய்யாதே. இன்றிருப்பதை சிறப்பாக செய்.
* வண்ணம் இல்லாத வானவில், நல்லெண்ணம் இல்லாத வாழ்க்கை இரண்டும் அழகாக இருப்பதில்லை.
* நல்ல மனிதர்களை அடையாளம் காண சில மோசமானவர்களை கடந்து தான் ஆக வேண்டும்.
* அனைவரையும் திருப்திபடுத்த முயற்சிக்காதீர்.
* தைரியம் என்னும் மந்திரத்தை ஜெபித்தால் பயமும் பாரமும் இல்லை.
* விடாமுயற்சியிருந்தும் வெற்றியில்லையா ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் முதலில் இருந்து முயற்சி எடு.
* காலத்தை கணிசமாகவும் ஆரோக்கியமாகவும் செலவிடுங்கள்.
* ஒரு செயல் முடிந்தது என நினைக்காதீர். அது அங்கிருந்து தான் ஆரம்பமாகும்.
* அமைதியாக இருக்காதீர். நரிகள் என தெரிந்தால் கர்ஜித்து பாருங்கள் ஓடிவிடுவார்கள்.
* வாழ்க்கையை முழுவதுமாக வாழுங்கள். அப்போது தான் நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

