sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

சொன்னபடி கேளு

/

சொன்னபடி கேளு

சொன்னபடி கேளு

சொன்னபடி கேளு


ADDED : மார் 14, 2025 08:47 AM

Google News

ADDED : மார் 14, 2025 08:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிராமத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பழக்கூடைகளை அடுக்கி வைத்தபடி வேகமாக வந்தான் இளைஞன் வின்சென்ட். சாலையோர டீ கடையில் இருந்த முதியவரிடம், 'ஐயா... நகரத்திற்கு போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்' எனக் கேட்டான். அவரோ, 'மெதுவாக போனால் ஒரு மணி நேரமும், வேகமாக போனால் இரண்டு மணி நேரம் ஆகும்' என்றார். அதை சொன்ன பிறகும் அவன் வண்டியின் வேகத்தை குறைக்கவில்லை.

குண்டும் குழியுமாக இருந்த சாலையில் வேகமாக சென்றதால் கூடைகள் சரிந்தன. பழங்கள் உருண்டு விழுந்தன. பழங்களை சேகரித்து விட்டு இரண்டு மணி நேரத்தில் நகரத்தை அடைந்தான். அனுபவசாலியின் பேச்சை கேட்காமல் பலர் இப்படித்தான் சிரமப்படுகிறார்கள்.






      Dinamalar
      Follow us