நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலங்கையில் உள்ள மிருகக்காட்சி சாலைக்குச் சென்றான் சிறுவன் ஒருவன். கூண்டில் ஒரு கரடியும், அதன் குட்டியும் இருந்தது. கூண்டுக்கு வெளியே, 'தொந்தரவு செய்யாதீர்' என எழுதியிருந்தது.
ஆனால் சிறுவன் மற்ற சிறுவர்களோடு சேர்ந்து கரடியின் மீது கற்களை வீசினான். கரடி உறுமியது. சிறுவன் தொடர்ந்து கற்களை வீசினான். கல் ஒன்று குட்டியின் மீது படவே, கூண்டை விட்டு வெளியே வந்த கரடி சிறுவனைக் காயப்படுத்தியது. அவனிடம் நல்ல எண்ணம் இல்லாததால் தான் கரடியை துன்புறுத்தினான்.
எதை விதைக்கிறாமோ அதையே அறுவடை செய்கிறோம் எனத் தெரிந்தும் தீமை செய்வது வருந்தத்தக்கது.

