இயேசுவின் முள் கிரீடம் படங்களிலும், சிற்பங்களிலும் பார்ப்பது போல மென்மையானது அல்ல. முட் செடிகளை அப்படியே அவர் தலையில் வைத்து அழுத்தினர். ஜெருசலேம் நகரில் இருந்து 50 கி.மீ., துாரத்தில் எரிக்கோ நகருக்கும், சாக்கடலுக்கும் இடையே இந்த முட்புதர் காடு இருந்தது.
முள் கிரீடத்தை சூட்டும் போது இயேசுவின் தலை பாதிப்பு அடைந்தது.
முள் கூரிய பகுதி தலையைப் பதம் பார்க்க, உடம்பெங்கும் ரத்தம் வழிந்தது.
மன்னர் கான்ஸ்டான்டி நோபிள் அந்த முள் கிரீடத்தை பிரான்ஸ் லுாயிஸ் மன்னருக்கு அன்பளிப்பாக கொடுத்தார். தன் காலணி அணியாமலேயே மன்னர் அந்த கிரீடத்தை சேன் என்ற இடத்திற்கு தன் கைகளால் சுமந்து சென்றார். முள் கிரீடத்திற்காக அழகிய ஆலயம் ஒன்றை எழுப்பினார். அப்போது மனதிற்குள், '' இயேசுவின் முள் கிரீடத்தின் முன்பு என் கிரீடம் ஒன்றும் பெரிதல்ல... இயேசுவுக்கு நிகராக ஒப்பீடு செய்யும் தகுதி எனக்கில்லை'' என்றார் மன்னர் லுாயிஸ்.

